Tuesday, 16 August 2011

ஆலனும் நானும் (சுதந்திர தின வாழ்த்துக்கள்!)

சனிக்கிழமையன்று ஓவியாவின் பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காக, நானும் ஆலனும் இசபெல் மருத்துவமனை போனோம். வர்ற வழியில கொஞ்சம் டிராபிக் ஜாம் ஆயிடுச்சு.

போச்சு, டிராபிக் ஜாம்-ல மாட்டிக்கிட்டீங்களா? கராத்தே கிளாஸ்-க்கு லேட் ஆயிடும்.

இல்லடா, 6.25-க்கு வீட்டுக்குப் போய்டலாம். பத்து நிமிஷத்தில கெளம்பி 6.45-குள்ள உன்ன கிளாஸ்-ல விட்டுடுறேன்.

போங்கப்பா, இப்பவே நைட் ஆகிட்டு இருக்கு.

நைட் ஆகுதா, அது எப்படி ஆகும்?

Sun வந்து அப்டியே அந்தப் பக்கம் போய்டும். அந்தப் பக்கம் போயி தூங்கிரும். அப்புறமா நிலா வந்து ஒரு shape-ஆ மேல வந்திரும்.

கராத்தே வகுப்பு முடிந்தவுடன், அவனைக் கூட்டிட்டு போகும் போது சொன்னேன். "நீ சொன்ன மாதிரியே நிலா வந்திருச்சு, அங்க பாரு".

ஆமா, பெருசா இருக்குல்ல, ஆனா ரொம்ப நேரம் அதப் பாக்காதீங்க. அப்புறம் ஓநாய் மாதிரி ஆகிடுவீங்க. (அன்று பௌர்ணமி)

ஹாஹாஹா!
(http://en.wikipedia.org/wiki/Werewolf)

Saturday, 1 January 2011

ஆலனும், நானும்! (Happy New Year 2011)

அப்பா, அம்மா, ஆலன் & ரோஷினி.


Daddy, நானும் உங்க கூட காய்கறி வாங்க வர்றேன்.

நான் சைதாபேட்டை மார்க்கெட் வரைக்கும் நடந்தே போறேன். ரெண்டு பை தூக்கனுன்டா, உன்னைய வேற கவனிக்கிறது கஷ்டம், நீ வேற திடீர்னு "நடக்க முடியல, தூக்கு"-ன்னா, என்னால முடியாது. 

நான் பச்சை மனிதன் மாதிரி செம ஸ்ட்ராங்கு. நான் உங்கள தூக்கல்லாம் சொல்ல மாட்டேன். நடந்தே வந்திருவேன், நானே ரெண்டு பையும் தூக்கிட்டு வந்திருவேன்.

Hulk-ஆ? அவன் என்ன பண்ணுவான்?

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. (இரண்டு கைகளையும் மார்பில் அடித்துக் கொள்கிறான்)

சரி போதும், எலும்பு ஒடஞ்சிரப் போகுது. மழை வரும் போலருக்கு, நனைஞ்சா சளி புடிக்கும், காய்ச்சல் வரும், நீ பேசாம வீட்டில இரு.

நான் raincoat போட்டுக்குவேன். அத போட்டா கொஞ்சம் கூட நனைய மாட்டேன்.

அங்கெல்லாம் ஒரே சகதியா இருக்கும், காலெல்லாம் சேறாய்டுன்டா.

அதுக்கு தான் அதோட rain shoes இருக்குல்ல?

(எந்தப் பக்கம் போனாலும் அணை கட்டுறான்?) செல்லம், இவனைக் கொஞ்சம் திசை திருப்புறியா? நான் கெளம்பனும்.


==========================================================================================

ஒரு நாள் தூங்கப் போகும் போது, கண்கள் இரண்டையும் திறந்து பார்த்தான் ஆலன்.

நீங்க என்ன கண் டாக்டரா?

ஆமா


திருச்சில ஒரு கண் டாக்டர் எனக்கு .25 power இருக்குன்னு சொன்னாரு. கண்ணாடி போடணுமா டாக்டர்? இல்லன்னா நீங்க கண்ணாடி போட வைக்காமலே சரி பண்ணிடுவீங்களா?

"உம்ம்ம்ம், கொஞ்சம் கண்ணை மூடுங்க"-ன்னு சொல்லிட்டு ரெண்டு கண்ணிலேயும் முத்தம் கொடுத்தான். "அப்படியே 5 minutes இருங்க, சரியாகிடும்"

ஓகே, டாக்டர்.

அஞ்சு நிமிஷம் ஆகிடுச்சு, கண்ண தொறக்கலாம்.

பீஸ் எவ்வளவு டாக்டர்? 100 rupees-ஆ?

1000 rupees, எனக்கு thousand தான் புடிக்கும்.

(எச்சில் வடியக் கொடுத்த இரண்டு முத்தங்களுக்கு எவ்வளவு வேணும்னா கொடுக்கலாம்) சரி, இந்தாங்கதேங்க்ஸ் டாக்டர், நான் வர்றேன்.


ஹலோ... இருங்க, காசு கொடுத்திருக்கீங்கல்ல, மாத்திரயும் வாங்கிட்டுப் போங்க.

நீங்க ரொம்ப நல்லவரு, டாக்டர்.



==========================================================================================

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 2011 சிறப்பான ஆண்டாக அமையட்டும்!

Monday, 29 November 2010

நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?

ஏதோவொரு சமயம் ஆலன் குட்டிக்கு அம்மா சின்ன உதவி செய்ய, அவன் "Thank You " என்று சொன்னான்.

அவனது அம்மா பதிலேதும் சொல்லாமல் வேறு ஏதோ வேலையில் மும்மரமாக இருந்தாள்.

"Thank You" சொன்னா, நீங்க "Welcome" சொல்லணும் தெரியாதா?

"ஆமாண்டா, இந்தம்மாவுக்கு ஒண்ணுமே தெரியல, நீ உங்க ஸ்கூல்-ல சேத்து 
விட்டு, சொல்லிக் கொடு."-ன்னு உசுப்பேத்தி விட்டேன்.

அம்மா, நான் உங்க வயித்தில கைய விட்டு, சாப்பாடெல்லாம் எடுத்திருவேன். அப்புறமா நீங்க "small girl" மாதிரி ஆயிடுவீங்க, உங்களுக்கு small girl போடுற "shirt", "skirt" எல்லாம் போட்டு விட்டு எங்க ஸ்கூல்-ல LKG-ல சேத்து விட்டுறேன். சரியா?

ஹா ஹா ஹா!

==================================================================================

சில நாட்களுக்கு முன்பு ஆலன் அருகில் அவனது அம்மா படுக்கவும், அவனது போர்வையை எடுத்து "நீங்களும் போத்திக்கோங்க" என்று சொல்லியிருக்கிறான்.

"எனக்கு வேண்டாம், நான் அப்புறமா வேற போர்வை எடுத்து போத்திக்கிறேன்" என்று அவள் சொல்லவும், அவன் சொன்ன பதில் "எப்பவுமே எல்லாத்தையும் share பண்ணிக்கணும்மா, என் கூட share பண்ணிக்கணும், அப்பா கூட share பண்ணிக்கணும். அப்புறம் குட்டிப் பாப்பா வந்தப்புறம், நான் அவ கூட share பண்ணிக்குவேன். எங்க ரெண்டு பேருக்கும் குட்டி கட்டில் வாங்கிடுங்க, நாங்க அங்க படுத்துக்குவோம், நான் பாப்பாவை நல்லா பாத்துக்குவேன்".

:-)

மைத்துனரின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்து, இவனுக்கும் தம்பியோ, தங்கையோ கூட இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகி விட்டது போல.

=================================================================================

ஆலன்: அம்மா

அம்மா: என்னடா?

ஆலன்: அம்மா, நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?

அம்மா: நான் ஏற்கனவே உங்கப்பாவை கல்யாணம் பண்ணிட்டேனே? நீ என் பிள்ளைடா, உன்னக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. உனக்கு 20 வருஷம் கழிச்சு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணி வைச்சிருவோம். சரியா?

ஆலன்: உங்க பேச்சு கா, இனிமே நான் உங்க கூட friend கிடையாது.